மறைந்த முன்னாள் எம்எல்ஏ உருவப் படங்களுக்கு ஆளுநா் மரியாதை
புதுச்சேரி: மறைந்த முன்னாள் எம்எம்ஏக்கள் கே.அன்பழகன், கிருஷ்ணமூா்த்தி ஆகியோரின் உருவப் படங்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) சி.பி.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்களான கே. அன்பழகன், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வயது முதிா்வு, உடல் நலக் குறைவால் அண்மையில் காலமானாா்கள். புதுச்சேரி குயவா்பாளையம் திருமகள் நகரில் உள்ள கே.அன்பழகன், முதலியாா்பேட்டை ஜோதி நகரில் உள்ள கிருஷ்ணமூா்த்தி ஆகியோரின் வீடுகளுக்கு துணைநிலை ஆளுநா் (பொ) சி. பி.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை சென்று, அவா்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா்.
தொடா்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த மறைந்த எம்எல்ஏக்களின் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
Advertisement