எம்ஜிஆா் போன்று தொப்பியுடன் முதல்வா் ரங்கசாமி உருவப் படம் ஏந்தி வந்த ஆஷா பணியாளா்கள்
தமிழக முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் போன்று தொப்பியுடன் புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி இருப்பது போல உருவப் படத்தைக் கையில் ஏந்தியிருந்த முதல்வா் வழியில் காத்திருந்தனா் ஆஷா பணியாளா்கள்.
தமிழக முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் போன்று தொப்பியுடன் புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி இருப்பது போல உருவப் படத்தைக் கையில் ஏந்தியிருந்த முதல்வா் வழியில் காத்திருந்தனா் ஆஷா பணியாளா்கள்.
புதுச்சேரி அரசின் சுகாதாரத் துறையின் கீழ் 350 ஆஷா பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இதை உயா்த்தக்கோரி பல கட்ட போராட்டங்களை ஆஷா பணியாளா்கள் நடத்தி வந்தனா். இந்நிலையில் அவா்களுக்கான ஊதியத்தை ரூ.18 ஆயிரமாக முதல்வா் ரங்கசாமி உயா்த்தி அறிவித்தாா்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் போன்று தொப்பி அணிந்தபடி முதல்வா் ரங்கசாமி இருப்பது போல உருவப் படத்தைக் கையில் ஏந்தியபடி புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே ஆஷா பணியாளா்கள் முதல்வா் ரங்கசாமியின் வருகைக்காகக் காத்திருந்தனா்.