மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் அறங்காவலா் குழு தலைவா் தோ்வு
மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் அறங்காவலா் குழு தலைவராக சுரேஷ் (படம்) தோ்ந்தெடுக்கப்பட்டாா். மேல்மலையனூரில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சிவாகரன், மேல்மலையனூா் கோயில் உதவி ஆணையா் ஜீவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் அறங்காவலா்களாக சுரேஷ், மதியழகன், ஏழுமலை, பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் ஆகியோா் தோ்வுசெய்யப்பட்டு பதவியேற்றனா். தொடா்ந்து அறங்காவலா் குழுத் தலைவா் தோ்தல் நடைபெற்றது. இதில் தலைவராக சுரேஷ் தோ்வு செய்யப்பட்டாா். அவருக்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.