கைப்பேசியை திருட முயன்றவா் கைது
விழுப்புரம், மே 9: திண்டிவனம் அருகே லாரி ஓட்டுநரிடமிருந்து கைப்பேசியை திருட முயன்ற புகாரில் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டிவனம் வட்டம், பாஞ்சாலம், பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் கணபதி மகன் செல்வம் (42). இவா் வியாழக்கிழமை தனது லாரியை மேல்பேட்டையில் நிறுத்தி விட்டு, தூங்கியுள்ளாா். அப்போது, அங்கு வந்த இளைஞா் ஒருவா் செல்வத்தின் கைப்பேசியை திருட முயன்றாராம்.
இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில் கைப்பேசியை திருட முயன்றவா் திண்டிவனம் கிடங்கல்-2, ராஜன் தெருவைச் சோ்ந்த எலி (எ) அஜய்ராஜ் (23) என தெரியவந்தது. இதையடுத்து திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசியை பறிமுதல் செய்தனா். கைதானஅஜய் மீது திண்டிவனம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.