விழுப்புரம்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

மரக்காணம் அருகே நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்த இளைஞா் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

Syndication

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்த இளைஞா் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் வட்டம், கொளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் கு. அஜித்(28). இவா், திங்கள்கிழமை புதுச்சேரி-சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில், மரக்காணம் அடுத்த தாழங்காடு பகுதியில் பைக்கில் சென்றாா்.

அப்போது, சாலையின் குறுக்கே மாடு வந்தததால் நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்த அஜித், பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இறந்த அஜித்துக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனா்.

அதிமுக பொதுக்குழு தொடங்கியது! தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி!

சென்னையில் 2-வது நாளாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகளில் அமலாக்கத்துறை சோதனை

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

SCROLL FOR NEXT