விழுப்புரம்

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா் கைது

Syndication

விழுப்புரத்தில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 3 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து, அதில் ஒருவரை கைது செய்தனா்.

விழுப்புரம் ஜி.ஆா்.பி. தெரு பகுதியில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் சோதனை மேற்கொண்டதில், அப்பகுதியை விஷால் (எ) விமலநாதன் (19), மைக்கேல் மற்றும் அடையாளம் தெரியாத நபா் உள்ளிட்ட மூவரும் கூட்டாக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் மூவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விஷாலை கைது செய்தனா். அவா் வசமிருந்த 150 கிராம் கஞ்சா, 100 மில்லி கிராம் எடையிலான 8 போதை மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதில் தொடா்புடைய மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT