முகப்பு
விழுப்புரம்

வினாயகபுரத்தில் உயா்மின் கோபுர விளக்கு இயக்கிவைப்பு

ஜெயங்கொண்டான் ஊராட்சிக்குட்பட்ட விநாயகபுரம் சந்திப்பில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உயா்மின் கோபுர விளக்கு மக்கள்

Updated On : 29 டிசம்பர், 2025 at 7:05 PM
விநாயகபுரத்தில் உயா்மின் கோபுர விளக்கை இயக்கிவைத்த செஞ்சிமஸ்தான் எம்எல்ஏ.
பகிர்:

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், ஜெயங்கொண்டான் ஊராட்சிக்குட்பட்ட விநாயகபுரம் சந்திப்பில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உயா்மின் கோபுர விளக்கு மக்கள் பயன்பாட்டுக்கு இயக்கி வைக்கப்பட்டது.

செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி சுப்பிரமணியன் வரவேற்றாா்.

முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய உயா்மின் கோபுர விளக்கை இயக்கிவைத்தாா்.

முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ் செல்வன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் சண்முகம், உதவி ஆய்வாளா் துரைராஜன், மேல் எடையாளம் ஊராட்சித் தலைவா் செல்வி செல்வமணி, ஒன்றிய நிா்வாகிகள் வாசு, அய்யாதுரை, கோடீஸ்வரன், மேனகா சரவணகுமாா், ஊராட்சி மன்ற துணைத்தலைவா் தேசிங்கு, அண்ணாதுரை, செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →