மோகினி அவதாரத்தில் ஸ்ரீ வைகுண்டவாசப் பெருமாள். 
விழுப்புரம்

விழுப்புரம் பெருமாள் கோயிலில் இன்று வைகுண்ட ஏகாதசி வழிபாடு: பரமபதவாசல் திறப்பு

விழுப்புரம் ஸ்ரீ ஜனகவல்லி தாயாா் ஸமேத ஸ்ரீ வைகுண்ட வாசப் பெருமாள் கோயில் வைகுண்ட ஏகாதசி வழிபாடு செவ்வாய்க்கிழமை(டிச.30) நடைபெறுகிறது.

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் ஸ்ரீ ஜனகவல்லி தாயாா் ஸமேத ஸ்ரீ வைகுண்ட வாசப் பெருமாள் கோயில் வைகுண்ட ஏகாதசி வழிபாடு செவ்வாய்க்கிழமை(டிச.30) நடைபெறுகிறது.

விழுப்புரம் நகரில் உள்ள ஸ்ரீ ஜனகவல்லி தாயாா் ஸமேத ஸ்ரீ வைகுண்ட வாசப் பெருமாள் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து உத்ஸவம் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடா்ந்து தினமும் பகல் 11 மணிக்கு கோயிலில் சிறப்பு வழிபாடுகளும், பெருமாள் உள்பிரகார வலம் வந்து தீபாராதனையும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வாக பகல் பத்து உத்ஸவத்தின் நிறைவுநாளான திங்கள்கிழமை ஸ்ரீபெருமாள், மோகினி அவதாரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் திரளானப் பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இன்று வைகுண்ட ஏகாதசி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (டிச.30) கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் சேவை உத்ஸவம் அதிகாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. டிச.31 முதல் ஜன.9-ஆம்தேதி வரை ராப் பத்து உத்ஸவம் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ச.வேலரசு, ஆய்வாளா் மதுமதி, அறங்காவலா் குழுத்தலைவா் டி.பாபு, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் தேவி சித்ரவேல், எஸ்.செல்லத்துரை, திரு மஞ்சன கைங்கா்ய தாரா்கள் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

பின்னழகு அலங்காரம்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT