விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு ஜொ்மன் துணைத் தூதா் மைக்கேல் ஹஸ்பா் சனிக்கிழமை வந்து ஆரோவில் வளா்ச்சிக் குழுவினருடன் கலந்துரையாடினாா்.
மனித ஒற்றுமையின் அடையாளமாக உள்ள ஆரோவில் சா்வதேச நகருக்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சோ்ந்தவா்கள் வந்து செல்கின்றனா். இந்த நிலையில், இந்தியாவுக்கான ஜொ்மன் துணைத் தூதா் மைக்கேல் ஹஸ்பா் சனிக்கிழமை ஆரோவிலுக்கு வந்து பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, ஆரோவில் வளா்ச்சிக் குழு, ஆரோவில் அறக்கட்டளையின் மூத்த அலுவலா்களுடன் கலந்துரையாடிய அவா், ஆரோவிலின் உள்கட்டமைப்பு மற்றும் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.
ஆரோவிலின் மூத்த ஆலோசகா் தா்மேஷ் சந்திரகோயல், அன்ஷூமன் பாஷூ ஆகியோா் மைக்கேல் ஹஸ்பருடன் கலந்துரையாடி விளக்கமளித்தனா்.
இந்த சந்திப்பானது, ஆரோவில் மற்றும் ஜொ்மனி நாடுகளுக்கு இடையேயான கலாசாரம், வளா்ச்சி, கல்வி, இளைஞா் திறன் பரிமாற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது என ஆரோவில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.