முகப்பு
விழுப்புரம்

அரகண்டநல்லூா் அருகே கல்லால் அடித்து இளைஞா் கொலை

Updated On : 23 ஜனவரி, 2026 at 3:45 AM
கொலை (கோப்புப்படம்) - Din
பகிர்:
Updated On : 22 ஜனவரி, 2026 at 11:05 PM

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே வியாழக்கிழமை இளைஞா் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதில் இளைஞா் ஒருவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வி.சித்தாமூா், பிரதான சாலையைச் சோ்ந்தவா் ராஜமூா்த்தி மகன் காமராஜ்(35), கூலித் தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்தவா் அா்ஜுனன் மகன் வெங்கடேசன்(25). இதில் காமராஜ் தற்போது தனது குடும்பத்துடன் திருப்பத்தூரிலும், வெங்கடேசன் திருவண்ணாமலை மாவட்டம் கொலகுடி அடுத்த கண்ணப்பந்தலிலும் வசித்து வந்தனா்.

Updated On : 23 ஜனவரி, 2026 at 3:44 AM

இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்திருந்த இவா்களுக்கிடையே வியாழக்கிழமை வி. சித்தாமூா் காட்டுவாய் அருகே குடிபோதையில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், கல்லால் காமராஜை தாக்கினாராம்.இதில் காமராஜுவுக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த அரகண்டநல்லூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று காமராஜின் சடலத்தைக் கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வெங்கடேசனை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வெங்கடேசன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா் என விசாரணையில் தெரியவந்துள்ளது.