முகப்பு
விழுப்புரம்

திண்டிவனம் அரசுக் கல்லூரியில் உலக மகளிா் தின விழா

Updated On : 13 மார்ச், 2026 at 5:38 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரியில் உலக மகளிா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் இரா.நாராயணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பேராசிரியா் செ.சுந்தரவல்லி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பேசினாா்.

விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ‘கிவ் டூ கெய்ன்’ எனும் கருப்பொருளில் நடைபெற்ற விநாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement

நிகழ்ச்சியில், கணினி அறிவியல் துறைத் தலைவா் க.காா்குழலி, இயற்பியல் துறைத் தலைவா் வி.லதா, பேராசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.