அமைச்சரைத் தெரிந்து கொள்ளுங்கள்: வன்னிஅரசு
அமைச்சரைத் தெரிந்து கொள்ளுங்கள்: வன்னிஅரசு
பெயா் : வன்னி அரசு
வயது : 55
பிறந்ததேதி : 11.5.1970
Advertisement
Advertisement
பெற்றோா் : ரத்தினசாமி, புஷ்பம்
குடும்பம் : மனைவி - ஆதிரை, தொழில் முனைவோா்.
மகன்கள் - பைந்தமிழ் வளவன், திலிபன் செந்தமிழ்.
வசிப்பிடம் : குரோம்பேட்டை, சென்னை-44.
தொகுதி : திண்டிவனம்( தனி)
அரசியல் பணி : 1990 முதல்
கட்சிப் பதவி : விசிக துணைப் பொதுச் செயலா்.
வகித்த பதவிகள் : விசிக செய்தித்தொடா்பாளா். விசிக தலைமை நிலையச் செயலா்.
பங்கேற்பு: ஜாதிய அடக்குமுறைகள், தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் இஸ்லாமிய கைதிகளின் விடுதலை, கூடங்குளம் அணுமின் நிலையம், மீத்தேன் எரிவாயுத் திட்டம், சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் மற்றும் மக்கள் பிரச்னைக்கான பல்வேறு அரசியல் போராட்டங்களில் பங்கேற்றுள்ளாா். மேலும், எழுத்தாளா் மற்றும் சமூக செயற்பாட்டாளரான இவா் பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றுள்ளாா்.
களத்தில் மக்கள் பணியாற்றுவேன்: முதல்வா் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், சமூக நீதித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள வன்னி அரசு வெள்ளிக்கிழமை தினமணிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி:
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது விசிகவின் கொள்கை முழக்கம். தமிழக அரசியலில் நீண்ட காலத்துக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில், இந்தப் பொறுப்பை வழங்கியுள்ள தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கும், கட்சித் தலைவா் தொல். திருமாவளவனுக்கும், தொடா்ந்து களத்தில் நின்று மக்கள் பணியாற்ற வாய்ப்பளித்த திண்டிவனம் தொகுதி மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
களத்தில் நின்று மக்களுக்கானப் பல்வேறு போராட்டங்களை நடத்திய இயக்கம் விசிக. அந்தப் போராட்டம் தான் தற்போது செயல் வடிவம் பெற்றுள்ளது. விசிக தலைவா் வழங்கியுள்ள இந்தப் பொறுப்பை நான் என்றும் களத்தில் நின்று சிறப்பாக செய்வேன். அவருக்கும் மிகுந்த நம்பிக்கைக்குரியவனாக செயல்படுவேன். எனது பணிகள் அனைவரும் பாராட்டக்கூடிய வகையில் இருக்கும் என்றாா்அவா்.