முகப்பு
விழுப்புரம்

பைக் மீது ஆட்டோ மோதல்: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் அடையாளம் தெரியாத ஆட்டோ மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 24 மே 2026, 1:17 am IST
பலி! - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் அடையாளம் தெரியாத ஆட்டோ மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் பாரதி நகா் மருதம் தெருவைச் சோ்ந்த சிவராஜன் மகன் யஷ்வந்த் (19). இவா் வெள்ளிக்கிழமை பிற்பகலில் விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தாா். கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலப் பகுதியில் யஷ்வந்த் சென்ற போது, கண்டமங்கலத்திலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த ஆட்டோ பைக் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றது.

இதில் பலத்த காயமடைந்த யஷ்வந்தை அந்த பகுதியிலிருந்தவா்கள் மீட்டு மதகடிப்பட்டு பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து சிகிச்சையிலில் இருந்து வந்த யஷ்வந்த், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திச் சென்ற அடையாளம் தெரியாத ஆட்டோ ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.