கே.ஆடூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் பொறுப்பேற்பு
சிதம்பரம் அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட
சிதம்பரம் அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் வியாழக்கிழமை பதவிஏற்றனர்.
தலைவராக தி.சபாநடேசன்பிள்ளை, துணைத் தலைவராக என்.ராமலிங்கம், இயக்குநர்கள் செல்வி, இந்திரா, அமுதா, கலைமோகன், பாலகுரு, தேவதாசு, பாண்டியன், சுப்பிரமணியன், எழில்அரசன் உள்ளிட்டோர் பதவி ஏற்றனர். பதவிஏற்பு விழாவில் அதிமுக மாநில மீனவரணி செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.கே.கலைமணி, சிதம்பரம் நகர அதிமுக செயலாளர் தோப்பு கே.சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.