கடலூர்

பண்ருட்டியில் இளம்பெண் கொலை

DIN

பண்ருட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் நகைக்காக சனிக்கிழமை குத்திக் கொல்லப்பட்டார்.
பண்ருட்டியை அடுத்துள்ள ஆர்.எஸ்.மணி நகர் 5ஆவது தெருவைச் சேர்ந்தவர் சுலைமான். பண்ருட்டியில் உள்ள துணிக் கடையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த காதர்பாஷா மகள் யாஸ்மின் (20)  என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை.
சுலைமான் வேலைக்குச் சென்றதும் யாஸ்மின் வீட்டுக் கதவை பூட்டிக்கொண்டு உள்ளே இருப்பாராம். சனிக்கிழமை மாலை 3 மணியளவில் யாஸ்மினின் தாய் பர்வீன் தனது மகளை செல்லிடப்பேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் தொடர்புகொள்ள முடியாததால் மகள் யாஸ்மின் வீட்டுக்கு நேரில் சென்றுள்ளார். அங்கு, கதவுகள் திறந்த நிலையில் இருந்தனவாம். உள்ளே சென்று பார்த்தபோது யாஸ்மின் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.முரளிதரன், ஆய்வாளர் கெங்காதரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர், சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், யாஸ்மின் வீட்டில் இருந்து சுமார் 8 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

மிகச் சிறப்பான நாள் இன்று!

SCROLL FOR NEXT