முகப்பு
கடலூர்

அரசுப் பள்ளி ஆண்டு விழா

சிதம்பரம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 21 மார்ச், 2017 at 10:53 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:47 PM

சிதம்பரம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
 விழாவில் சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பா.கோமதி வரவேற்று ஆண்டறிக்கையை வாசித்தார்.
 விழாவில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், சிதம்பரம் நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் ரா.செந்தில்குமார், ஒன்றிய அவைத் தலைவர்கள் சுந்தரமூர்த்தி, கோவி.ராசாங்கம், ஒன்றிய இளைஞரணிச் செயலர் செழியன், நிர்வாகிகள் கோதண்டம், மாரிமுத்து, கணேஷ், வேல்முருகன், அருள், ஜே.கே.முத்து, மகேந்திரன், சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதவித் தலைமை ஆசிரியர் டி.பாண்டிதுரை நன்றி கூறினார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.