குறிஞ்சிப்பாடி பேரூராட்சிப் பகுதியில் வேலை உறுதித் திட்டத்தைச் செயல்படுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரூராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலர் ராஜீ தலைமை வகித்தார். நகரச் செயலர் எம்.மணி, நிர்வாகிகள் தண்டபாணி, எஸ்.வி.அருள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பின்பு பேரூராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.