கடலூர்

தேசிய வலைபந்து போட்டி: சிதம்பரம் மாணவி தேர்வு

தினமணி

தேசிய அளவிலான வலைபந்து போட்டியில் பங்கேற்க சிதம்பரம் மாணவி தேர்வு செய்யப்பட்டார்.
 இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் சார்பில் ஈரோட்டில் அண்மையில் நடைபெற்ற வலைப்பந்து தகுதித் தேர்வு போட்டியில் மகளிருக்கான 14 வயதுக்குள்பட்டோர் பிரிவில் மாநிலம் முழுவதும் இருந்து 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
 அவர்களில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மானசா தேர்வு செய்யப்பட்டார்.
 இதன்மூலம் இவர் தேசிய அளவில் தெலங்கானாவில் நடைபெற உள்ள வலைபந்து போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளார்.
 போட்டியில் வென்ற மாணவி மற்றும் பயிற்சி அளித்த உடல்கல்வி ஆசிரியர்கள் பிரபாகரன், விக்னேஷ், உமா, தரணி ஆகியோரை வியாழக்கிழமை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் வீனஸ் எஸ்.குமார், முதல்வர் ரூபியாள்ராணி, கல்வி அதிகாரி ஜி.மகேஷ்சுந்தர் ஆகியோர் பாராட்டினர் .
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT