கடலூர்

தோசை சாப்பிட்ட முதியவர் சாவு: 2 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் 

தினமணி

பண்ருட்டி அருகே தோசை சாப்பிட்ட முதியவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். வாந்தி மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட 2 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 பண்ருட்டி ஒன்றியம், சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு சுபா (16), சுதாகர்(11) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். திங்கள்கிழமை மதியம் பழனிவேலின் தந்தை ராமச்சந்திரன் (76), குழந்தைகள் சுபா, சுதாகர் ஆகியோர் வீட்டில் தோசை சுட்டு சாப்பிட்டனராம். சிறிது நேரத்தில் இவர்கள் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், ராமச்சந்திரன் உயிரிழந்தார்.
 ஆபத்தான நிலையில் இருந்த சுபா, சுதாகர் ஆகியோர் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்துக்கான காரணம் குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT