மணல் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்
மணல் கடத்தல் தொடர்பாக 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மணல் கடத்தல் தொடர்பாக 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேப்பூரை அடுத்துள்ள பில்லூர் பகுதியில் வேப்பூர் காவல் துறையினர் அண்மையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் அள்ளி வந்த 2 லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதில், உரிய ஆவணமின்றி வெள்ளாற்றில் இருந்து மணல் அள்ளிவந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, லாரி ஓட்டுநர்கள் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்துள்ள பட்டணங்குறிச்சியை சேர்ந்த செ.தமிழ்மணி (29), விருத்தாசலம் அருகே உள்ள புலியூரைச் சேர்ந்த ச.ஜெயசுந்தர் (30) ஆகியோரை கைது செய்ததோடு, லாரிகளையும் மணலுடன் பறிமுதல் செய்தனர்.