கடலூர்

காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்கக் கூட்டம்

DIN


காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்க வேலூர் கோட்டத்தின் 31-ஆவது பொது மாநாட்டுக்கான வரவேற்புக் குழு ஆலோசனைக் கூட்டம், பண்ருட்டி எல்ஐசி அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வரவேற்புக் குழு தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். கோட்டச் சங்க பொதுச் செயலர் ராமன் மாநாட்டு பணிகள் குறித்துப் பேசினார். எல்ஐசி முதல் நிலை அதிகாரிகள் சங்கம் தியாகராஜன், முகவர் சங்கம் மோகன், ஓய்வு பெற்றோர் சங்கம் சார்பில் சுப்ரமணியன், பாண்டுரங்கன், ஜெயராமுலு, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கம் சார்பில் சாந்தகுமார், சீனுவாசன், சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் உத்திராபதி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலர் கிருஷ்ணன், விவசாய சங்கம் துரைராஜ், ஏழுமலை மற்றும் எல்ஐசி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், ஆக. 19, 20 ஆகிய தேதிகளில் பண்ருட்டியில் நடைபெற உள்ள மாநாட்டை முன்னிட்டு 19-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும் பொதுத் துறை பாதுகாப்புப் பேரணியை சிறப்பாக நடத்துவது. கலை இரவு மற்றும் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றினர். வரவேற்புக் குழு செயலர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT