கடலூர்

குழந்தை உயிரிழந்த விவகாரம்: மாயமான தாய் மீட்பு

DIN

பண்ருட்டி அருகே அண்டா நீரில் மூழ்கி குழந்தை உயிரிழந்ததை அடுத்து தலைமறைவான குழந்தையின் தாயை உறவினர்கள் சனிக்கிழமை மீட்டனர்.
பண்ருட்டி அருகே உள்ள கட்டமுத்துப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (32). புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயசித்ரா (26). இவர்களது குழந்தைகள் மிதுன் (2), லக்ஷன் (7 மாதம்). வியாழக்கிழமை மதியம் ஜெயசித்ரா தனது வீட்டில் துணி சலவை செய்துகொண்டிருந்தாராம்.
அப்போது, குழந்தை லக்ஷன் தண்ணீர் இருந்த அண்டாவை பிடித்தபடி விளையாடிக்கொண்டிருந்தாராம். அப்போது, சமையல் அறைக்கு சென்று திரும்பி வந்த ஜெயசித்ரா, தனது குழந்தை லக்ஷன் அண்டாவில் வைத்திருந்த தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும், இதுதொடர்பாக தனது கணவர், மாமனாருக்கு அஞ்சிய நிலையில், துணியால் குழந்தையை மூடிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். அவரை போலீஸார், குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில், ஜெயசித்ரா தனது தந்தை ஜெயராமனை தொடர்புகொண்டு நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார். மேல்மருவத்தூர் கோயிலில் தங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மேல்மருவத்தூர் சென்ற உறவினர்கள் ஜெயசித்ராவை மீட்டு வந்து குழந்தையின் இறுதிச் சடங்கை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT