கடலூர்

வி.சி.க.வினர் துண்டறிக்கை விநியோகம்

DIN

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், சேலம் - சென்னை 8 வழி பசுமைச் சாலைத் திட்டத்தைக் கண்டித்து நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பான துண்டறிக்கையை அந்தக் கட்சியினர் நெய்வேலி நகரியப் பகுதிகளில் புதன்கிழமை விநியோகம் செய்தனர்.
 அந்தக் கட்சி சார்பில் சேலத்தில் ஜூலை 20-ஆம் தேதி 8 வழி பசுமைச் சாலைத் திட்டத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
 இந்த ஆர்ப்பாட்டம் அந்தக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற உள்ளது.
 இந்த ஆர்ப்பாட்டம் குறித்த துண்டறிக்கைகளை கடலூர் நாடாளுமன்றத் தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமையில் அந்தக் கட்சியினர் நெய்வேலியில் விநியோகம் செய்தனர்.
 நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டப் பொருளாளர் துரை.மருதமுத்து, நெய்வேலி நகரச் செயலர் ராச.முருகன், குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலர் கோவேந்தன், நிர்வாகிகள் கோபால், குமார், பன்னீர், தமிழரசன், விஸ்வநாதன், பழனி, வெங்கடேசன், ராஜ்குமார், காட்டுராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 இதேபோல, கடலூர் பகுதிகளிலும் துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொகுதி விசிக துணைச் செயலர் கோபால், ஒன்றியத் துணைச் செயலர் ராஜசேகர், சந்தோஷ், ஜெயகாந்தன், சுதாகர், பிரவீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT