சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, அண்ணாமலைப் பல்கலைக்கழக தலைமை நிர்வாக அலுவலகத்தில், பதிவாளர் கே.ஆறுமுகம் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்வில் மொழியியல் புல முதல்வர் வி.திருவள்ளுவன், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி இராம.சந்திரசேகரன், கடல் வாழ் அறிவியல் புல முதல்வர் ஏ.சண்முகம், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் திரளானோர் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.