கடலூர்

விபத்தில் ஒருவர் சாவு

DIN

நெய்வேலி அருகே வியாழக்கிழமை லாரியும், சிறிய ரக சரக்கு வாகனமும் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
நெய்வேலி, மாற்றுக் குடியிருப்பு செக்டார் பகுதி 3-இல் வசித்து வந்தவர் முருகன். சிறிய ரக  சரக்கு வாகன ஓட்டுநர். வியாழக்கிழமை முருகனும், மாற்றுக் குடியிருப்பு, 6-ஆவது பிரதான தெருவைச் சேர்ந்த ரமேஷ் (46) என்பவரும்  சிறிய ரக சரக்கு வாகனத்தில் தக்காளி ஏற்றிக்கொண்டு வடலூர் நோக்கி வந்துகொண்டிருந்தனர். வாகனத்தை முருகன் இயக்கினார். 
வீணங்கன்னி கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி, சிறிய ரக சரக்கு வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் முருகன், ரமேஷ் இருவரும் பலத்த காயமடைந்தனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் முருகன் உயிரிழந்தார். ரமேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.  விபத்து குறித்து மந்தாரக்குப்பம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT