முகப்பு
கடலூர்

பெண்ணை தாக்கிய இளைஞர் கைது

பெண்ணை தாக்கி, அவரது வீட்டைச் சூறையாடிய இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

Updated On : 15 மே, 2018 at 4:21 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

பெண்ணை தாக்கி, அவரது வீட்டைச் சூறையாடிய இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
நெய்வேலி அருகே உள்ள கீழ்வடக்குத்து பகுதியில் வசிப்பவர் நீலாவதி (44). இவர், தனது மகனின் திருமணத்துக்கு பத்திரிகை அடித்துள்ளார். அதில், அதே பகுதியில் வசிக்கும் பாபு என்பவரின் பெயர் இடம் பெறவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பாபு, நீலாவதியின் வீட்டுக்குச் சென்று அவரை கத்தியால் தாக்கி, வீட்டில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கினார்.
இதுகுறித்து நீலாவதி அளித்த புகாரின் பேரில், நெய்வேலி நகரிய போலீஸார் பாபுவை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.