கடலூர்

திட்டக்குடியில் வி.சி.க.வினர் ஆர்ப்பாட்டம்

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்  புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 திட்டக்குடி பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கி நிற்காத வகையில் மேம்பாடு செய்ய வேண்டும். திட்டக்குடி ஸ்ரீவைத்தியநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான திருக்குளத்தில் வடக்குப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். அரசு கலைக் கல்லூரிக்கு தனியாக சிறப்பு பேருந்து இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகர செயலர் கெளதமன் தலைமை வகித்தார்.
 மங்களுர் ஒன்றிய இணைச் செயலர் பி.முருகானந்தம், ஒன்றிய பொருளாளர் க.பாரதவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் கருப்புசாமி கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கோ.குணத்தொகையன், இடைச்செருவாய் கணேசன், வழக்குரைஞர் அம்பேத்கர், க.ராமகிருஷ்ணன், ஜான்செங்குட்டுவன், பழனிவேல், வீரமணி, சு.சங்கர், ஹென்சன்பிரபு, ஆவட்டி ரவி, காசி.கணேசன், இளையராஜா, சண்முகம், இளமங்கலம் பிரேம் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர இணைச் செயலர் முருகையன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT