கடலூர்

பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு

DIN

புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கை கழுவுதலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 
 இதுதொடர்பாக, புவனகிரி அருணாச்சலா பள்ளி, ஆதிவராகநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளி, கள்ளிக்காடு அரசு ஆரம்பப் பள்ளி ஆகியவற்றில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, புவனகிரி ரோட்டரி சங்கத் தலைவரும், காமராஜ் கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியுமான தமிழரசு சம்பந்தம் தலைமை வகித்துப் பேசினார். 
 நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு சுத்தம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆதிவராகநல்லூர் அரசுப் பள்ளிக்கு இலவசமாக குடிநீர் தொட்டி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க செயலர் சேஷாத்திரி, பொருளாளர் மணவாளன், அருணாச்சலா பள்ளி செயலர் ராமலிங்கம், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT