கடலூர்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு சிறை

தினமணி

ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் 22 வயது இளைஞருக்கு கடலூர் மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை சிறைத் தண்டனை வழங்கியது.
 கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் அபோன்ராஜ் மகன் மணிகண்டன் (22). இவர், கடந்த 4.8.2016 அன்று அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாராம்.
 இதுகுறித்து நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடலூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததற்கு 3 ஆண்டுகளும், சிறுமியை பாலியல் தாக்குதலுக்கு உள்படுத்தியதற்காக 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து, மணிகண்டன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

SCROLL FOR NEXT