விருத்தாசலம் அருகே கதண்டுகள் கொட்டியதில் 10 பேர் வெள்ளிக்கிழமை காயமடைந்தனர்.
விருத்தாசலம் அருகே சி.கீரனூர் கிராமத்தில் பச்சை வாழியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் வெள்ளிக்கிழமை காதணி விழா நடத்தினர். இந்த நிகழ்வில் சமையல் செய்தபோது ஏற்பட்ட புகையால், அந்தப் பகுதியில் மரத்தில் வசித்து வந்த விஷ தன்மை கொண்ட கதண்டுகள் வெளியேறின. பின்னர், அவை அங்கிருப்பவர்களை விரட்டி கொட்டத் தொடங்கின. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மயக்க நிலைக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் "108' ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.