கடலூர்

கதண்டு கொட்டியதில் 10 பேர் காயம்

DIN

விருத்தாசலம் அருகே கதண்டுகள் கொட்டியதில் 10 பேர் வெள்ளிக்கிழமை காயமடைந்தனர்.
விருத்தாசலம் அருகே சி.கீரனூர் கிராமத்தில் பச்சை வாழியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் வெள்ளிக்கிழமை காதணி விழா நடத்தினர். இந்த நிகழ்வில் சமையல் செய்தபோது ஏற்பட்ட புகையால், அந்தப் பகுதியில் மரத்தில் வசித்து வந்த விஷ தன்மை கொண்ட கதண்டுகள் வெளியேறின. பின்னர், அவை அங்கிருப்பவர்களை விரட்டி கொட்டத் தொடங்கின.  இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மயக்க நிலைக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் "108' ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT