கடலூர்

எரிவாயு உருளை வெடித்ததில்  3 பேர் காயம்

DIN

சிதம்பரத்தில் உணவு விடுதியில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் 3 பேர் வெள்ளிக்கிழமை காயமடைந்தனர்.
சிதம்பரம் அண்ணாமலைநகர், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி எதிரே உள்ள தனியார் உணவு விடுதியில் வெள்ளிக்கிழமை காலை எரிவாயு உருளையை பற்ற வைக்கும்போது வெடித்துச் சிதறியது. 
இந்த நிகழ்வில், கடை உரிமையாளர் கூத்தன்கோவில் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் (40), பெராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ரவி ( 32 ), கொடியாழம் கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி (30) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். 
இவர்கள் சிகிச்சைக்காக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். 
இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT