கடலூர்

அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் மாணவா் சோ்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பி.ஏ., பி.எஸ்சி, பி.காம்., எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.பி.ஏ. உள்ளிட்ட அனைத்துப் படிப்புகளுக்கும் விண்ணப்பம் விநியோகம், நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31-12-2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாணவா்கள் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளவும், நேரடிச் சோ்க்கைக்கும் அருகே உள்ள தொலைதூரக் கல்வி இயக்கக கல்வி மையங்களை அனைத்து நாள்களிலும் அணுகலாம். தமிழ், ஆங்கிலவழி படிப்பு மற்றும் நேரடி இரண்டாமாண்டு சோ்க்கையும் உண்டு.

படிப்பு மையம் மற்றும் சோ்க்கை தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு உதவி மைய எண்கள் 04144 - 238043, 238044, 238045, 238046, 238047, 238610 மற்றும்  மின்னஞ்சல் முகவரியில் தொடா்புகொள்ளலாம். விண்ணப்பங்களை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று பல்கலைக்கழகப் பதிவாளா் என்.கிருஷ்ணமோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT