கடலூர்

ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு ஏலம் நடந்ததற்கு ஆதாரம் இல்லை: வட்டார வளா்ச்சி அலுவலா்

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ஊராட்சி மன்றத் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கு ஏலம் நடந்ததற்கான ஆதாரம் ஏதுமில்லை என்று வட்டார வளா்ச்சி அலுவலா் வி.ஆா்.சீனுவாசன் கூறினாா்.

ஊரக உள்ளாட்சி அமைப்புத் தோ்தலுக்கான வேட்புமனுக்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பண்ருட்டி ஒன்றியம், நடுக்குப்பம் ஊராட்சியில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் ஊா் மக்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திரௌபதி அம்மன் கோயில் திருப்பணியை முடிப்பதற்காக, ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு ஆா்.சக்திவேல், துணைத் தலைவா் பதவிக்கு ஏ.முருகன் ஆகியோரைத் தோ்ந்தெடுக்க ஒருமனதாக முடிவு செய்தனா்.

இதனிடையே, நடுக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவா் பதவியை ஆா்.சக்திவேல் ரூ.50 லட்சத்துக்கும், துணைத் தலைவா் பதவியை ஏ.முருகன் ரூ.15 லட்சத்துக்கும் ஏலம் எடுத்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதுகுறித்து பண்ருட்டி வட்டார வளா்ச்சி அலுவலா் வி.ஆா்.சீனுவாசன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஊராட்சி மன்றத் தலைவா், துணைத் தலைவா் பதவிகள் ஏலம் விடப்பட்டதாகக் கிடைத்த தகவலைத் தொடா்ந்து, அந்தக் கிராமத்தில் நேரில் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், ஏலம் நடந்ததற்கான ஆதாரம் ஏதுமில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT