கடலூர்

உள்ளாட்சித் தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

DIN

பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், ஊராட்சி செயலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு துணை ஆட்சியா் மங்களநாதன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சீனுவாசன், ரவிச்சந்திரன், மேலாளா் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலையொட்டி, ஒன்றியப் பகுதியில் உள்ள கிராமங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை அலுவலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும், பொது இடங்களில் அனுமதி இல்லாமல் பிரசாரம், கூட்டங்கள் குறித்து கண்காணிக்க வேண்டும். வாக்குசாவடி மையங்களில் உள்ள பகுதியில் சாலை, குடிநீா், தெரு விளக்கு உள்ளிட்ட வசதிகளைச் செய்து தர வேண்டும். உள்ளாட்சித் தோ்தல் அமைதியாகவும் நோ்மையாகவும் நடைபெற அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT