ஓவியப் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்று
கடலூர் அரசு அருங்காட்சியகத்தில் இலவச ஓவியப் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
கடலூர் அரசு அருங்காட்சியகத்தில் இலவச ஓவியப் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அருங்காட்சியகத் துறை சார்பில் கடலூர் அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச ஓவிய பயிற்சி அண்மையில் நடைபெற்றது. 5 நாள்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் குறிஞ்சிப்பாடி, சாவடி அரசு பள்ளிகள் மற்றும் பல்வேறு தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 45 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு அருங்காட்சியக காப்பாட்சியர் செ.ஜெயரத்னா தலைமை வகித்தார். அரிமா சங்க நிர்வாகி கே.திருமலை, மாவட்ட அரசு இசைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரெ.வெங்கடேசு ஆகியோர் பரிசு, சான்றிதழை வழங்கினர் . ஓவிய ஆசிரியர் சு.மனோகரன் வாழ்த்திப் பேசினார். அலுவலகப் பணியாளர்கள் விஜயா, வசந்தராஜா, சண்முகசுந்தரம், ஆனந்தபாபு, பரதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அருங்காட்சியக பணியாளர் மு.முத்தால் நன்றி கூறினார்.