கடலூர்

குழந்தையுடன் பெண் மாயம்

DIN


நெய்வேலி அருகே குழந்தையுடன் வெளியே சென்ற மனைவி வீடு திரும்பவில்லை என அவரது கணவர் போலீஸாரிடம் புகார் அளித்தார்.
நெய்வேலியை அடுத்துள்ள ஊ.மங்கலம் காவல் சரகம், ஊத்தங்கால் பழைய காலனியில் வசிப்பவர் சுரேஷ் (31). இவரது மனைவி நந்தினி (23). இவர்களுக்கு தனுஷ்கா (7), ரித்திகா (2) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் வேலை செய்து வந்த சுரேஷ் கடந்த மாதம் ஊர் திரும்பினார்.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை குழந்தை ரித்திகாவுடன் வெளியே சென்ற நந்தினி மீண்டும் வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம். 
இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில், ஊ.மங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT