கடலூர்

ஆன்மிக நடைபயணம்

DIN

உலக நன்மை வேண்டி பண்ருட்டியில் சிவ தொண்டர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆன்மிக நடைபயணம் மேற்கொண்டனர்.
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் இருந்து ஆன்மிக நடைபயணம் புறப்பட்டது. முன்னதாக, கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர், ஓதுவார் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற நடைபயணத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற நடைபயணம் புதுப்பேட்டையில் அடுத்துள்ள சித்தவட மடம் சிதம்பரேஸ்வரர் கோயிலில் முடிவடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT