கடலூர்

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா

DIN

பண்ருட்டியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 பண்ருட்டி லட்சுமிபதி நகரில் உள்ள வடகைலாசம் கூட்டுறவுச் சங்கத்தின் 2-ஆம் எண் நியாய விலைக்கடையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு,  பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் தலைமை வகித்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புப் பொருள்களுடன், ரூ.1,000 ரொக்கப் பணத்தையும் வழங்கினார்.
 முன்னதாக, கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஏழுமலை வரவேற்றார். கூட்டுறவுச் சங்கத் தலைவர்கள் ராம்குமார், சரஸ்வதி கோவிந்தன், துணைத் தலைவர்கள் வேலு, சத்யா ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் ராஜதுரை, கூட்டுறவுச் சங்க இயக்குநர் ரமாதேவி ராமலிங்கம், கூட்டுறவு சங்கச் செயலர் (பொறுப்பு) குணா, ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT