கடலூர்

போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி

DIN

கடலூரில் செயல்பட்டு வரும் மாவட்ட  மைய நூலகத்தில் போட்டித் தேர்வுக்கான இலவச மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பிரிவு-2, பிரிவு-2ஏ பணியிடத் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 
 இந்தப் பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை (ஜன.12) தொடங்கி ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். மேற்கூறிய தேர்வுகளில் பங்கேற்க விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் பயிற்சியில் பங்கேற்கலாம். இந்தப் பயிற்சி மையத்தால் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், திரளானோர் பணி வாய்ப்பைப் பெற்றுள்ளனர். எனவே, தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட நூலக அலுவலர் 
பெ.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT