கடலூர்

குற்றமற்ற சமுதாயம்: அரசுப் பள்ளியில் விழிப்புணர்வு

DIN

குறிஞ்சிப்பாடி காவல் நிலையம் சார்பில், "குற்றமற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியை இ.லட்சுமி தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர் என்.ராமதாஸ் வரவேற்றார். நெய்வேலி காவல் துணைக் கண்காணிப்பாளர் என்.சரவணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட எஸ்பி ப.சரவணன் பங்கேற்று, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நோட்டு புத்தகம், மரக் கன்று, விதைப் பந்துகளை வழங்கி பேசினார்.
 சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கடலூர் மகளிர் நீதிமன்ற சிறப்பு அரசு வழக்குரைஞர் க.செல்வப்பிரியா பேசுகையில், பெண்கள் தற்காப்பு, எச்சரிக்கையுடன் செயல்படுதல் குறித்து விளக்கினார். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் டி.கனகசபை, வடலூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். குறிஞ்சிப்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் எஸ்.பிரசன்னா நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT