கடலூர்

சொர்ணபுரீஸ்வரர் கோயிலில் உழவாரப் பணி

DIN

சிதம்பரம் அப்பர் உழவாரப் பணி மன்றம் சார்பில், கலியமலை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஜெகதாம்பிகை சமேத ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் கோயிலில் உழவாரப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 மன்ற நிர்வாகிகள் என்.காளிதாஸ், ரத்தினம், நடராஜன், சேகர், முத்தையன், கண்ணன், நளினி, சுப்பிரமணியன், ராமச்சந்திரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்று கோயில் வளாகத்தில் இருந்த செடி, கொடிகள், முள்புதர்களை அகற்றினர்.
 மேலும் அனைத்து சந்நிதிகளையும் நீரினால் கழுவி சுத்தம் செய்தனர். இதையொட்டி, சிவபூஜை, மாகேஸ்வர பூஜை, திருமுற்றோதல் நிகழ்ச்சி, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
 உழவாரப் பணிக்கான ஏற்பாடுகளை மன்றச் செயலர் வீ.சந்திரசேகரன் செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT