பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள வீரட்டானேஸ்வரர் கோயிலில் தை மாதம் பெளர்ணமியன்று (ஞாயிற்றுக்கிழமை) மாட வீதியில் பக்தர்கள் வலம் செல்ல உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்தது.
அதன்படி, மாலை 6 மணி முதல் பக்தர்கள் மாட வீதியை 16 முறை வலம் வரலாம். இரவு 7 மணி முதல் 12 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இரவு 11 மணிமுதல் 12 மணிவரை சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.