கடலூர்

பள்ளி நூலகத்துக்கு ரோட்டரி சங்கம் நல உதவி

DIN

சிதம்பரம் அருகே புதுப்பூலாமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நூலகத்துக்கு சிதம்பரம் ரோட்டரி சங்கம், சபாநாயகம் அறக்கட்டளை இணைந்து உதவிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. 
 விழாவில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆர்.பாலமுருகன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினார். சிதம்பரம் ரோட்டரி சங்கச் செயலர் ஆர்.ராஜசேகரன் வரவேற்றார். அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மற்றும் ரோட்டரி மண்டல துணை ஆளுநர் எஸ்.நடனசபாபதி சுமார் ரூ.15,000 மதிப்பிலான புத்தக அலமாரிகளை பள்ளிக்கு வழங்கினார் . 
 பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.தேவி முன்னிலை வகித்தார். பள்ளியின் முன்னாள் மாணவரும், விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருமான கே. முனுசாமி நூலகத்துக்கு புத்தகங்களை வழங்கினார். விழாவில் ரோட்டரி சங்க மூத்த உறுப்பினர்கள் வி.அழகப்பன், சோனா என்.என்.பாபு, பள்ளி ஆசிரியர்கள் எம். அன்புச்செழியன், சி.ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT