கடலூர்

உளுந்தூர்பேட்டை அருகேமொபெட் மீது கார் மோதல்: 2 பேர் பலி

DIN


உளுந்தூர்பேட்டை அருகே வியாழக்கிழமை இரவு மொபெட் மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். பெண் ஒருவர் காயமடைந்தார்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஊ.கீரனூர் காலனியைச் சேர்ந்த நடேசன் மகன் மொன்னையன்(50). இவர், தனது மனைவி கொளஞ்சியம்மாள்(48), உறவினர் கடலூர் மாவட்டம், பட்டாம்பாக்கம் அருகேயுள்ள துறைப்பாடி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை(47) ஆகியோருடன் ஒரு மொபெட்டில் உளுந்தூர்பேட்டையிலிருந்து பண்ருட்டியை நோக்கி வியாழக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தார்.
உளுந்தூர்பேட்டையை அடுத்த கெடிலம் அருகே சென்றபோது, மொபெட் மீது அந்த வழியாக வந்த கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மொன்னையன் உள்ளிட்ட 3 பேரும் ஆம்புலன்ஸ் உதவியுடன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மொன்னையன், அண்ணாமலை ஆகிய இருவரும் அன்றிரவு உயிரிழந்தனர். திருநாவலூர் போலீஸார் வழக்குப்பதிந்து  விசாரணை செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT