பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஆனி மாத பெளர்ணமியை முன்னிட்டு, அப்பர் இல்ல அறக்கட்டளை சார்பில் ஆன்மிகச் சொற்பொழிவு அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அப்பர் இல்ல அறக்கட்டளை நிறுவனர் ச.செந்தில்வேலன் தலைமை வகித்தார். காவல் துறை துணைக் கண்காணிப்பாளர்கள் கோ.நாகராஜன் (பண்ருட்டி), எம்.லோகநாதன் (நெய்வேலி) ஆகியோர் நிகழ்ச்சியை தொடக்கி வைத்துப் பேசினர். தொழிலதிபர் எஸ்.வைரக்கண்ணு முன்னிலை வகித்தார்.
விழுப்புரம் கம்பன் கலை அரங்கச் செயலர் மு.க.சங்கரன் பங்கேற்று, "ஆன்மிகச் சிந்தனைகள்' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
முன்னதாக அபிநயா நாட்டியப் பள்ளி மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மூர்த்தி நன்றி கூறினார்.