கடலூர்

மதுக் கடை திறப்பில் விதிமீறல்: விற்பனையாளர்கள் 3 பேர் கைது

DIN

அரசு நிர்ணயித்த நேரத்துக்கு முன்பாகவே டாஸ்மாக் மதுக் கடையை திறந்த விற்பனையாளர்கள் 3 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
 பண்ருட்டி வட்டம், அரசூர் பிரதான சாலையில் அரசு மதுபானக் கடை (எண் 2450) இயங்கி வருகிறது. இங்கு, ராயர்பாளையத்தைச் சேர்ந்த ராமர் (24), புதுப்பேட்டையைச் சேர்ந்த குருமூர்த்தி (40), எல்.என்.புரத்தைச் சேர்ந்த சுரேஷ் (42) ஆகியோர் விற்பனையாளராகப் பணியாற்றி வருகின்றனர்.
 இவர்கள், அரசு விதியை மீறி திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன்னதாகவே மதுக் கடையை திறந்து, மதுப் புட்டிகளை விற்பனை செய்தனராம். இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி காவல் உதவி ஆய்வாளர் ஜவ்வாது உசேன், ராமர் உள்பட 3 பேரையும் கைது செய்து, பின்னர் பிணையில் விடுவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT