கடலூர்

ரயிலில் அடிபட்டு இளைஞர் சாவு

தினமணி

ரயிலில் அடிபட்ட இளைஞர் உயிரிழந்தார்.
 கடலூர் முதுநகர் அருகே உள்ள அன்னவல்லியைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் பத்மநாபன் (39). வியாழக்கிழமை மதியம் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கண்ணாரப்பேட்டை ரயில்வே சுரங்கப் பாதை அருகே ரயிலில் அடிபட்ட நிலையில் பத்மநாபன் உயிரிழந்து கிடப்பதை அந்தப் பகுதியினர் பார்த்தனர்.
 இதுகுறித்து தகவலறிந்த கடலூர் முதுநகர் ரயில்வே போலீஸார் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே பகுதியிலிருந்து அவரது மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர். இவர், வியாழக்கிழமை இரவு திருச்சியிலிருந்து திருப்பாதிரிபுலியூர் சென்ற பயணிகள் ரயிலை கடக்க முயன்றபோது, ரயிலில் அடிப்பட்டு இறந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT