கடலூர்

தேர்தல் விழிப்புணர்வுக் கூட்டம்

DIN

பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களவைத் தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பண்ருட்டி வட்டாட்சியர் கீதா தலைமை வகித்தார். தேர்தல் உதவி அலுவலர் ராஜஸ்ரீ, நெய்வேலி தேர்தல் உதவி அலுவலர் மங்களநாதன் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை, தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர்.
கூட்டத்தில் துணிக் கடை, பாத்திரக் கடைகளில் டோக்கன் மூலமாக பொருள்களை விநியோகம் செய்யக் கூடாது,  திருமண மண்டபங்களில் விருந்து நிகழ்ச்சி, இலவசப் பொருள்களை வழங்குதல் கூடாது, விழா நடத்த அனுமதி அளிக்கக் கூடாது. கடை வீதிகளில் பதாகைகள் வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. 
அச்சக உரிமையாளர்கள் அதில் தொலைபேசி எண்ணை குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் வருவாய்த் துறை அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள், வணிகர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT