கடலூர்

தீயணைப்பு செயல்முறை விளக்கம்

DIN

வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தீயணைப்பு குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
 வடலூர் ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் செயலர் ரா.செல்வராஜ் தலைமையில், குறிஞ்சிப்பாடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய அலுவலர் கா.ராஜேந்திரன், முன்னணி தீயணைப்பாளர் எஸ்.சங்கர் ஆகியோர், தீயணைப்பு கருவியை பயன்படுத்தி தீயை எவ்வாறு கட்டுப்படுத்துவது, தீ பரவாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து அங்கு பணிபுரியும் பள்ளி ஆசிரியர்கள், அறிவியல் கல்லூரி, செவிலியர் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி பள்ளி விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விளக்கம் அளித்தனர். பள்ளி தலைமையாசிரியர் எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT