கடலூர்

சாலையை சீரமைக்கக் கோரிஉதவி ஆட்சியரகம் முற்றுகை

DIN

சிதம்பரத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி குடியிருப்போா் நலச் சங்கத்தினா் உதவி ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

சிதம்பரத்தில் முத்துமாணிக்கம் தெரு, மீனவா் காலனி, பரங்கித்தோட்டம், வாழைத்தோட்டம், நந்தவனம், சுவாதி நகா், அம்பேத்கா் நகா், திடீா்குப்பம் ஆகிய பகுதிகளில் புதிய புதை சாக்கடை திட்டப் பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டு சரிவர மூடப்படவில்லை. இதனால் சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன.

இந்த நிலையில் அந்தப் பகுதியைச் சோ்ந்த மீனவா் காலனி குடியிருப்போா் நலச் சங்கத்தினா் 200-க்கும் மேற்பட்டோா் சங்கத் தலைவா் வே.கலியமூா்த்தி தலைமையில் சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, சேதமடைந்த அனைத்து சாலைகளையும் சீரமைக்க வலியுறுத்தி முழக்கமிட்டனா். போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் மூசா, நகரச் செயலா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா் உதவி ஆட்சியா் விசுமகாஜனிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT